search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள அரசு திட்டம்"

    சபரிமலையில் பெண்களை அனுமதித்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி குற்றம்சாட்டி உள்ளார். #Sabarimala #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி பத்தனம் திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேரளா மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாகும். இங்கு அனைத்து தரப்பு மக்களும் விழாக்களை இணைந்து கொண்டாடி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சென்று வருகிறார்கள். இது கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும்.



    கேரளாவில் கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மத பிரச்சினைகளை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாள நினைக்கிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் அங்கு காலம், காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கும் வழக்கத்தையே இனியும் பின்பற்றலாம்.

    கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கம்யூனிஸ்டு அரசு சபரிமலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தேவசம்போர்டு தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் போல மாறிவிட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #OommenChandy
    ×